Saturday 27th of April 2024 10:09:14 AM GMT

LANGUAGE - TAMIL
வல்வெட்டித்துறையில் மூன்று வீடுகள் இராணுவத்தினரால் சுற்றிவளைப்பு!

வல்வெட்டித்துறையில் மூன்று வீடுகள் இராணுவத்தினரால் சுற்றிவளைப்பு!


யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறையில் மூன்று வீடுகள் இராணுவம் மற்றும் பொலிஸாரால் சுற்றிவளைக்கப்பட்டிருப்பதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

வல்வெட்டித்துறை சிதம்பராக் கல்லூரிக்கு அண்மையாக உள்ள மூன்று வீடுகளே இவ்வாறு சுற்றிவளைக்கப்பட்டுள்ளன.

வடமராட்சி கிழக்கு நாகர்கோவில் பகுதியில் இராணுவத்தினர் ஒருவரைத் தாக்கிய நபர் ஒருவர் தலைமறைவாகியிருந்த நிலையில் குறித்த நபரை கைது செய்வதற்காகவே வல்வெட்டித்துறையில் இராணுவத்தினர் சுற்றிவளைப்பினை மேற்கொண்டிருப்பதாக முதற்கட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன. குறித்த சுற்றிவளைப்பு நடவடிக்கையில் இராணுவத்தினருடன் இணைந்து வல்வெட்டித்துறை பொலிஸாரும் ஈடுபட்டிருப்பதாகவும் தெரியவருகிறது.


Category: செய்திகள், பகுப்பு
Tags:



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE